வகைப்படுத்தப்படாத

400 தேங்காய்களுடன் மாட்டிக்கொண்ட 4 திருடர்கள்

(UTV|PUTTALAM)-மாரவில, லன்சிககம பகுதியில் உள்ள தேங்காய் தோட்டத்திலிருந்து 400 தேங்காய்கள் திருடிய 4 பேரை மாரவில பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் திருடப்பட்ட தேங்காய்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பல முறை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඛනිජ තෙල් සංස්ථාවත් සමග ලංවිම කිසිම අර්බුදයක් නැහැ – විදුලිබල ඇමති කියයි

தமிழகத்தில் ஈழ அகதியொருவர் தற்கொலை?

வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு