உள்நாடு

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது

(UTV | கொழும்பு) -சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகள் மற்றும் 7 லொறிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு -13 பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முதலீட்டு ஊக்குவிக்க கோட்டா-மஹிந்த-பசில் தலைமையில் குழு

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல்!

பெஞ்சமின் நேதன்யாகு : 12 ஆண்டு கால ஆட்சி முடிவு