அரசியல்உள்நாடு

25 வருட சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்த முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், 14,000 கெரம் பலகைகளையும் 11,000 தாம் பலகைகளையும் சட்டவிரோதமாக வாங்கி, விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நளின் பெர்ணான்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை இரத்து செய்ய உத்தரவிடுமாறும், தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் நளின் பெர்ணான்டோ உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

Related posts

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான் எம்.பி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிடியாணை

editor

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்