வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீதி ஊர்வலத்திற்கு போதுமான யானைகள் இல்லாதது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.