வகைப்படுத்தப்படாத

24 மணிநேரம் இடைநிறுத்தப்படவுள்ள நீர் விநியோகம்

(UTV|COLOMBO)-அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோகப் பிரதான குழாய் கட்டமைப்பில் திருத்தநடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் காலை 9.00 மணியிரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

கொழும்பு 1, 2 ,3, 4 ,7, 8 ,9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இதன்காரணமாக கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கான குறைவான அழுத்தத்துடன் நீர்விநியோகம் காணப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி

Efficiency important to alleviate poverty

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 8 குழந்தைகள் உயிரிழப்பு