உள்நாடு

24 மணி நேர வேலை நிறுத்தம் – ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் எடுத்த முடிவு

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று வியாழக்கிழமை (26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இலங்கை சுதந்திர ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலதிக நேரக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்தே இவ் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என நதீர மனோஜ் தெரிவித்தார்.

Related posts

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

சாதாரண தர பரீட்சை முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது