கிசு கிசுசூடான செய்திகள் 1

24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை-360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு முடக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் வெளியிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த குழுவி​னரை மேற்கோள்காட்டி ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களூடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

கிளிநொச்சி வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை’ மாநாடு ஜனாதிபதி தலைமையில்