உள்நாடுபிராந்தியம்

22 வயதுடைய மனைவியைக் கொன்று விட்டு 25 வயதுடைய கணவன் தற்கொலைக்கு முயற்சி

வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

நேற்று (17) மாலை மனைவி மற்றும் கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கணவன் மின்விசிறி வயரினால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் கணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

25 வயதுடைய சந்தேகநபர் வைத்தியசாலையில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

editor