உள்நாடுபிராந்தியம்

21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப் பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.

குழந்தையை பிரசவித்த பின்னரான 32 நாட்களில் இரண்டு நாட்கள் கண் விழித்து பார்த்த நிலையில் ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையிலேயே அவர் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (07) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

editor

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

editor

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி