சூடான செய்திகள் 1

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

(UTVNEWS|COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து நடாத்தப்பட்டு வரும் “2020 இல் சஜித் வருகிறார்” என்ற கருப்பொருளில் மக்கள் பொதுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.

குறித்த பொது கூட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி பதுளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…

இலங்கையில் பரவிவரும் ஆபத்தான நோய்