உள்நாடுவிசேட செய்திகள்

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஒகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.

புதிய நாணயத் தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.

இச் செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும்.

குறித்த நாணயத் தாள் பரிமாற்றப்படுகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுகின்றது.

அத்துடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றி பயன்படுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

Related posts

மறைந்த ரொனி டி மெல் உக் – ஜனாதிபதி இறுதி அஞ்சலி

‘குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாரில்லை’ – அனுரகுமார

ரயிலில் மோதி 27, 32 வயதான இரு இளைஞர்கள் பலி

editor