உள்நாடுபிராந்தியம்

2 ஆம் நாளாக தொடரும் போராட்டம் – தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று (10) 2ஆம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை முதல், காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது

இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருளாதார போரை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகளுள்ளன – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்

editor

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்

சுகாதார ஆலோசனைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை