உள்நாடு

மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளாவன;

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டம் – பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம் – திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம் – வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு

 

Related posts

📌 LIVE UPDATE || வரவு-செலவுத்திட்ட உரை – 2024

போதை பொருட்களுடன் 04 பேர் கைது

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு விசா வழங்க வேண்டாம் – ஜனாதிபதி அநுரவுக்கு தேசிய ஷுரா சபை கடிதம்

editor