உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்

(UTV | கொவிட் – 19) – கொரோனா கொற்றாளர்கள் என சந்தேகத்தின் பேரில் நேற்றை தினம்(21) சுமார் 600 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார் .

விஷேடமாக கெத்தாராம மைதானத்திற்கு அண்மையில் உள்ள பிரதேசம், அதற்கு முன்னர் பொரலஸ்கமுவ பகுதியில் பதிவாகிய நபர் சென்றதாக கூறப்படும் கொட்டாவ பகுதியில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஊழியர்களும் PCR பரிசோதனைக்கு உள்வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

அதன் பரிசோதனை முடிவுகள் அநேகமாக இன்று (22) கிடக்கப்பெறும் எனவும் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்

Related posts

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

குவைத் தேசிய தின வைபவம் கொழும்பில்