உள்நாடுபிராந்தியம்

17 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு Diamond Excellence விருது

editor

திருடர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார் – சஜித்

editor

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி