உள்நாடு

16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

(UTV | மதவாச்சி) – 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வீதியிலுள்ள ஏனைய சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

editor

 பசறை மாணவர்களுக்கு விடுமுறை – பலத்த காற்றினால் பெரிதும் பாதிப்பு

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

editor