உள்நாடு

14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

(UTV | கொழும்பு) –  14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

கொழும்பை அண்மித்த பகுதியில் வசிக்கும் மற்றும் கொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி, வீட்டில் தனியாக இருக்கும் வேளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நபர் 50 வயதுடையவர எனவும், 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும்,அவரது மனைவி உயிரிழந்துள்ளதுடன், தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளராக பணிபுரிபவர்என்றும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை மேற்க்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உணவு விஷமானதால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பதிவுசெய்த தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல் 

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு