உள்நாடுபிராந்தியம்

12 மணிநேரம் நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆறு பேர் ஆணைக்குழுவில் முன்னிலை

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

editor

“13ஐ முழுமையாக அகற்றும் சட்டத்தை கொண்டு வாருங்கள்”  நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகம் அறியட்டும்