சூடான செய்திகள் 1

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

(UTV|COLOMBO)-நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் அண்மித்த பகுதிகளில் இன்றும்(30) நாளையும்(31) கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சூழலை துப்பரவு செய்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என கல்வி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பெற்றோர் உள்ளிட்டோரும் கலந்துகொள்வது அவசியம் என சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப்பிரிவின் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை

editor

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் நான் பிரார்த்திக்கின்றேன்

கொழும்பில், 2500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு