சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

Related posts

இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு சர்வதேச பயிற்றுநர்

இ.போ.ச தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

editor