உள்நாடு

10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களில், போலியான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஓட்டிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.

Related posts

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்