உள்நாடுசூடான செய்திகள் 1

09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் டிசம்பம் 09ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

வரவு-செலவுத்திட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி நிறைவடைந்த கையோடு , அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளார். இவ் அமைச்சரவையில் எதிர்க்கட்சியின் 02 முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்குவது குறித்து அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ஆயத்தமாக வருவதாக தமிழ் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

இச்செய்தியை பகிருங்கள்
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எகிறும் தங்க விலை

யோஷித ராஜபக்‌ஷவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 துப்பாக்கிகள்!

editor

வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

editor