உள்நாடு

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (14) வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கண்டி மாவட்டத்துக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கையானது, நாளை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Related posts

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலவசமாக வழங்கப்படுகின்ற பேசா விசா கோரி ஆளும் கட்சி எம்.பிக்கள் அழுத்தம்

editor

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்