சூடான செய்திகள் 1

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – சம்பள அதிகரிப்பை கோரி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்திருந்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 07ம் திகதி முதல் 11ம் திகதி வரை இந்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்த ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்ஹ, சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள தீர்வு குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்ப்பதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(08)

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு