சூடான செய்திகள் 1

மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTVNEWS|COLOMBO ) – எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு களுத்துறை, களுத்துறையை அண்மித்த பிரதேசங்கள் சிலவற்றில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி​ வாதுவ, வஸ்கடவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கும் பிலிமினாத்த, பொம்புவல, மக்கோன, பேருவளை, களுமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு