சூடான செய்திகள் 1

மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTVNEWS|COLOMBO ) – எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு களுத்துறை, களுத்துறையை அண்மித்த பிரதேசங்கள் சிலவற்றில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி​ வாதுவ, வஸ்கடவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கும் பிலிமினாத்த, பொம்புவல, மக்கோன, பேருவளை, களுமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவு

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இராஜதந்திர ரீதியில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை