சூடான செய்திகள் 1

ஹேமசிறி – பூஜித் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று(23)உத்தரவிட்டுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கொழும்பு பிரதான நீதிவன் நீதிமன்றினால் கடந்த 09 ஆம் திகதி மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

குடைசாய்ந்த கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு