உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர, 18வது மைல்கல் மற்றும் கொட்டுகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ராகம, களனி, சீதுவ மற்றும் கட்டுநாயக்க பகுதிகளைச் சேர்ந்த 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன் போது, சந்தேகநபர்களிடமிருந்து 27 கிராம் 255 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

“இந்தியாவில் கைதான ஐ.எஸ் நபர்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்” நாட்டாமை ஒருவர் தொடர்பாம்!

மீள ஆரம்பிக்கப்படும் கொக்குதொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள்!