அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள்

வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவத்திற்கு நீதி கோரியும், எதிர்வரும் 15 ஆம் திகதி முழு ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் குறித்து நீதியான விசாரணை அவசியமென அவர் வலியுறுத்தினார்.

வடக்கு-கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மக்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதற்கு இந்த மரணம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைக் கண்டித்து, வடக்கு மற்றும் கிழக்கில் முழுமையான ஹர்த்தாலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இடியுடன் கூடிய மழை

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்