உள்நாடுசூடான செய்திகள் 1

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று (10) உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நீதிமன்றத்தில் ஆஜராகி, மனு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.

அரசியலமைப்பின் பிரகாரம், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றம் மனுக்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என பிரதிவாதி தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் இன்றே தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தல்

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு

editor

வடமாகாண மருந்தகங்களில் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்