உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்காக நேற்று (15) ஹம்பாந்தோட்டை பகுதியிலும் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சோதனை செய்த போதிலும், அவர் தப்பிச் சென்றதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 8 சொகுசு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 க்ரூஸர்கள் உட்பட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவை பூங்காவில் உள்ள ஒரு களஞ்சியத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

Related posts

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு யார் பொறுப்புக் கூறுவது? – சஜித் பிரேமதாச கேள்வி

editor

அசோக ரன்வலவின் இராஜினாமா தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

editor