உள்நாடு

ஹட்டன் நகருக்கான நீர் விநியோகம் மட்டு

(UTV|கொழும்பு) – ஹட்டன் – சிங்கமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், ஹட்டன் நகருக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களாக. சிங்கமலை வனப்பகுதியில் தீ பரவல் காரணமாக, குறித்த நீரேந்து பிரதேசம் வற்றிப்போயுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹட்டன் – டிக்கோயா இன்வரி பகுதியிலிருந்து பெறப்படும் நீரை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை 5 மணித்தியாலங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தற்போது காணப்படும் நீரின் அளவு, குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லையென்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

editor

இலங்கையில் ஆண்டுதோறும் 3000க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் பதிவு.

எந்தவொரு சுயநல அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன்

editor