இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன்
ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று(26) ஹட்டன்-டிக்கோயா நகர சபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுரேந்திர ஆரச்சிலாகே அசோக கருணாரத்ன 08 வாக்குகளைப் பெற்று தவிசாளரானார்.
மேலும் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
இதில் தே.ம.ச வேட்பாளர் 08 வாக்குகளை பெற்று தவிசாளர் ஆனதுடன்., ஐ.ம.ச வேட்பாளர் 07 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
மொத்தமாக ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்காக 15 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.