உள்நாடு

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலகக்குழுத் தலைவரான ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெனியா மற்றும் பிரசன்ன என்று அழைக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 5 கிராம் மற்றும் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மற்றுமொரு நபர் சுகமடைந்தார்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று