அரசியல்உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார் விஜயதாச ராஜபக்ஷ – உப தலைவர் பதவி உட்பட நான்கு பதவிகளுக்கு நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவை அதன் சிரேஷ்ட உப தலைவர் பதவி உட்பட நான்கு பதவிகளுக்கு நியமித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள், விஜயதாச ராஜபக்ஷவுக்கு அந்தப் பதவிக்கு மேலதிகமாக மஹரகம தொகுதி அமைப்பாளர், கொழும்பு மாவட்டத் தலைவர் மற்றும் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பதவிகளையும் வழங்கியதாகக் கட்சி தெரிவித்துள்ளது.

விஜயதாச ராஜபக்ஷ போன்ற சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் கட்சியுடன் இணைவது ஒரு பலம் என்றும், இந்தக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சி என்ற ரீதியில் நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னரே இந்தக் கட்சியை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

காணாமல் போயிருந்த நபர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

editor

ஒரே தீர்வு மக்களுக்கான நிரந்தர காணி உரிமையினை பெற்றுக்கொடுப்பதே – ஜீவன் தொண்டமான்

editor

தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்கள் வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.