உள்நாடு

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – மீண்டும் தடை உத்தரவு!

கிழக்கு மாகாணம் ஆயுர்வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத  வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்துக்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான   தடை உத்தரவை  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன  விடயத்தை தடுத்து நிறுத்தும் வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு மீதான விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான அந்தோனிப்பிள்ளை யூட்சன்  முன்னிலையில் திங்கட்கிழமை (17) மறு  விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும்   நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் கிழக்கு மாகாண  பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேர் கொண்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரிணிகளின் வாதப் பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பவர் மாதம் 8 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதுடன் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் தொடர்பில் மீண்டும் நீடிக்கப்பட்ட தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனுதாரரின் வழக்கை ஆதரித்து சட்டத்தரணிகளான ஐ .எல்.எம் றமீஸ், எம்.எம்.எம்.முபீன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட கூட்டம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor

இந்த அரசாங்கம் Fail – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor