சூடான செய்திகள் 1

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-இரத்த பரிமாற்ற நிலைய மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், இன்னும் உள்ள சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்த பரிமாற்ற நிலையத்தின் கடமை நேர பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று(09) பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு உரிய அதிகாரிகள் எவ்வித பதிலும் வழங்காததால் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அதிக வருமானத்தை பெற்றுள்ள சதொச

பாதுகாப்புக் குழுவின் தலைமையதிகாரிக்கு 27ம் திகதி CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பு

“சனத்தின் மரணத்தில் சந்தேகம்- மனைவியின் திடீர் முடிவு”