இரத்தினபுரி மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமைய (01) காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தில்
பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இரத்தினபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களிடம் முன் வைத்தனர்.
மேற்படி வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கம் பிரச்சினைகள் குறித்து தாம் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரின் கவனத்திற் கொண்டு வந்துள்ளதாகவும், இதற்கான தீர்வினை விரைவில் பெற்று தருவதாகவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பட்டதாரிகள் எதிர்நோக்கு பிரச்சனைகள் குறித்து விரைவில் தீர்வினை பெற்று தருவதாகவும் அதுகுறித்து தான் ஒருபோது பின் வாங்குவதில்லை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சாந்த பத்மகுமார, மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்