உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு – நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம்

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று (7) காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது.

தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இருப்பினும், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (05) காலை 8 மணிக்கு ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.

இது நோயாளர்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய பின்னணி இருந்த போதிலும், சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரமாட்டார் என தெரிவித்தே, வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், 5 தொழிற்சங்கங்களில் 4 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு

editor

மாதம்பே பகுதியில் கோர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி – மூவர் பலி

editor

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகிறது

editor