உள்நாடுசூடான செய்திகள் 1

வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான அவசர எச்சரிக்கை

மழையுடனான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மல்வத்து ஓயாவை அண்டிய தந்திரிமலை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தெதுறு ஓயாவை அண்மித்த மொரகஸ்வெவ பகுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்வத்து கங்கையை அண்மித்த மனம்பிடிய மற்றும் யான் ஓயாவை அண்மித்த ஹொரவ்பொத்தான பகுதிகளிலும் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையினால், 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

கெஹெலியவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும் வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

editor