வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் இன்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஷிபான், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைஷர் மரைக்கார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தஸ்லீம், வஸீம் தாஹீர், மெளலவி பஸால் இஸ்மாயில், மாதம்பே அனர்த்த முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு
