உள்நாடு

வெளிவிவகார அமைச்சகத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் திணைக்களம் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தூதரக சேவைகளுக்கான பாரிய தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிராந்திய தூதரக அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்களும் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவினால் இதுவரை 211 பேர் பலி

ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் – கோட்டாபய ராஜபக்ஷ CIDயில் இருந்து வெளியேறினார்

editor

மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்