உள்நாடு

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களின்படி, இந்த இசை நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வியாழன் வரை மாலை 06 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை நடத்த முடியும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 06 மணியிலிருந்து அதிகாலை 1.00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06 மணியிலிருந்து நள்ளிரவு 12.30 மணி வரை நடத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு அக்கினிப் பரீட்சை – முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

editor

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

கடந்த 24 மணித்தியாலத்தில் 42,496 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தம்