உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை கைது செய்தபோது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், 9 தோட்டாக்களும், சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய வேபட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

இரண்டு எம்பிக்கள் கடும் வாய்த்தர்க்கம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய ஸ்ரீதரன் எம்.பி | வீடியோ

editor

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமைக்கு செனெட் குழு கண்டனம்!

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு