சூடான செய்திகள் 1

வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வருடத்தின் நவம்பர் மாதம் வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,609 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

Related posts

அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி தீர்மானம்

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிஸார் சேவையில்

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலை