பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் வீடு ஒன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ காயங்களுக்கு உள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.