அரசியல்உள்நாடு

விரைவில் சிக்கப்போகும் 40 முன்னாள் எம்.பிக்கள் – விமல் வீரவன்ச வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அரசாங்கம் தன்னையும் 40 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் கைது செய்யப்பட வேண்டிய 40 அரசியல் வாதிகளின் பெயர் விபரங்களை இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவிடம் கையளித்துள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்டபட்டியலில் உள்ளவர்களிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் இயக்குநர் ஜனாதிபதி செயலகத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்கின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அந்த பட்டியலில் எனது பெயர் உள்ளது, காஞ்சன விஜயசேகர ரமேஸ் பத்திரன ஆகியோரின் பெயர்களும் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் மகிந்தானந்த அளுத்கமகேயும் இவ்வாறே கைதுசெய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் அமைச்சுகளின் கீழ் வரும் திணைக்களங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்கின்றனர் ஆனால் அதற்காக முன்னாள் அமைச்சர்களை கைதுசெய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல்களின் பின்னரே எனது பெயரை கைது செய்யப்படவேண்டிய அரசியல்வாதிகளின் பட்டியலில் சேர்த்தார்கள் என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, ஊழல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைதுசெய்யாமையினாலேயே தனக்கான வாக்குகள் குறைவடைந்தன என அரசாங்கம் கருதுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி வெளியானது

editor

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்