தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்த வழக்கை ஜூலை 15 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (29) உத்தரவிட்டார்.
ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது சம்பளம் மற்றும் பிற வருமானங்களிலிருந்து சம்பாதிக்க முடியாத சுமார் 75 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2015 நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (29) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.