உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் மரணம்!

மட்டக்களப்பு, ஆரையம்பதி, 5ஆம் கட்டையில் நேற்றிரவு (00) இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த்துடன. மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி 5 ஆம் கட்டையில் நேற்றிரவு 10. 00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்ந விபத்தில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (21) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்முனை சாலை வழியே நேற்றிரவு 10.00 மணியளவில் வேனும் உயிரிழந்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி 5 ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த பகுதியில. பயணிக்கும் போதே நேருக்கெ நேர் மோதி விபத்துக்குள்ளாகின

குறித்த விபத்தில் சிக்கிய வேன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து – நான்கு பேர் பலி

editor

உதயங்க வீரதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி

கொழும்பின் சில பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு