உள்நாடு

விடைப்பெற்றது ‘பாத்திய’

நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானைக்கு உயிரிழந்துள்ளது.

இந்த யானை மருதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த வனப்பகுதியில் பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, வனவள அதிகாரிகளும் வனச் சுகாதார பிரிவின் உயிரியல் நிபுணர்களும் இணைந்து சிகிச்சை வழங்கி வந்தனர்.

எனினும், வயதானதுடன் பல நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த யானை, இயற்கை சீரழிவுகளுக்கும் உடல் நல குறைபாடுகளுக்கும் உட்பட்டு, இன்று (15) காலை உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

‘பாத்திய’ என அழைக்கப்பட்ட இந்த யானை, அதன் அமைதியான நடத்தை மற்றும் சுற்றுவட்டாரத்தில் நீண்ட காலமாக காணப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே பரிச்சயமானதாக இருந்தது.

யானையின் உடல், சட்டவிதிகளின்படி ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், அதன் மரணத்திற்கு காரணமான முழுமையான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என வனவளத்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.

Related posts

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் பலி – ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

editor

இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க